கோயம்புத்தூர், அக்.19- கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்திய விவகா ரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி செயற்பொறியாள ருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அத்து மீறி அரசுப்பள்ளிக்குள் நுழைந்து பயிற்சி எடுத்துள்ளதாக காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டி ருப்பதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் விளக்கம் அளித்துள் ளார். கோவை மாநகராட்சி, ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் பயிற்சி மேற்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதனன்று மாநகராட்சி யில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க யார் அனுமதி வழங்கியது? யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு உள்ளதா? என அடுக்கடுக் கான கேள்விகளை மாமன்ற உறுப்பி னர்கள் எழுப்பினர். இதுகுறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இது தொடர்பாக ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது.
மேலும் எழுத்துப்பூர்வமாக எந்த அனுமதியும் மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. எனவே அத்து மீறி பள்ளிக்குள் நுழைந்ததாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் வடக்கு துணை ஆணை யாளர் தலைமையில் விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணை அறிக்கை இதுவரை வரவில்லை என்றார். இதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தலைமை ஆசிரிய ருக்கு எந்த தகவலும் வரவில்லை, அனுமதியும் கோரவில்லை. மாநக ராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரி லேயே அவர்கள் உள்ளே சென்று இருக்கிறார்கள். எனவே தலைமை ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமல்லா மல், உதவி செயல் பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏற்கனவே தகவல் அளித்துள்ளோம் என்றார். இருப்பினும் திருத்தியடையாத மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது, எடுக்கப்பட்டுள் ளது, யார் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது குறித்து எல்லாம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஆணையாளர் விளக்கமளிக்கையில், அத்துமீறி நுழைந்தவர்கள் மீது பொதுவான வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் அவை மாற் றப்படும் என தெரிவித்தார்.