states

கொரோனா பரவல் - இணை நோயாளிகள் எச்சரிக்கையாக இருங்கள்: அமைச்சர் அறிவுரை

சென்னை, ஏப். 11- நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் இணை நோய் இருப்பவர்கள் மட்டும் சற்று  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்று சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண் டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று கேள்வி நேரம் முடிந்ததும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து  சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்தார். அப்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணி வதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப் படுத்த வேண்டும் என்றும் கொரோனா  பரவலைத் தடுக்க தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி  பேசுகையில், “சமீப காலங்களில் கொரோனா தொற்று தமிழ்நாடு முழு வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தாக ஊடகங்களில் செய்திகள் வருகி றது. இதனை கட்டுக்குள் கொண்டு  வருவதற்கு அரசு உரிய நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை,  பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராமச் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தி.வேல்முருகன், ஈஸ்வரன், சதன் திருமலை குமார் உள்ளிட்டோரும் இது குறித்து பேசினர்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதிலளித்து கூறியதாவது: தமிழ்நாடு மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது. இந்த பரவல் தீவிரமாக இல்லை என்பதால் பெரிய  அளவில் பதற்றமான சூழல் இல்லை.  புதிய கொரோனா வைரஸ் லேசான  அளவிலான பாதிப்பையே ஏற்படுத்து கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பை  கருத்தில் கொண்டு பொதுமக்கள்  முகக்கவசம் அணிந்து செல்வது  நல்லது. ஆனால் கட்டாயப்படுத்த வில்லை. கொரோனா பாதிப்பு பெரியள வில் இல்லை என்றாலும், இணை  நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்ச மாக அதிகரித்துக் கொண்டிருப்பதால், இதனை 4ஆவது அலையாக கருத முடியாது. கொரோனா தொற்று அதி கரித்தால் பொது இடங்களில் மக்கள்  முகக்கவசம் அணிவது கட்டாயமாக் கப்படும். தற்போது வந்திருக்கும் கொரோனா  பாதிப்பு உயிரை பறிக்கும் பாதிப்பாக இல்லை. காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை ஏற்படுகிறது, இதனால் ஆக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தேவைப்படவில்லை. 2,067 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு தமிழ கத்தில் வசதிகள் உள்ளன. கொரோனா  வைரஸ் எப்படி உருமாறி வந்தாலும் தமிழ்நாட்டு மக்களை இந்த அரசு பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.