states

‘தேசாபிமானி 80’ நாளை நிறைவு விழா

திருவனந்தபுரம், ஜன.16- கேரள தொழிலாளி வர்க்கத்தின் ஒருங்கிணைப்பாளனாக, பிரச்சாரகனாக, போராட்டக்கார னாக பீடுநடை போட்டுவரும் தேசாபிமானி நாளிதழ் தனது 80வது  ஆண்டு நிறைவு விழாவை இன்று  திருவனந்தபுரத்தில் கொண்டாடு கிறது. 80 ஆண்டு காலம் கேரள மக்க ளின் வாழ்வோடு இணைந்து பய ணித்துள்ள தோசாபிமானி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அச்ச மின்றிப் போராடியதனால் நிரந்தர மாக ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளானது என்பது தேசாபிமானியின் வரலாற்றோடு இணைந்ததாகும்.

1942ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோழிக்கோட்டிலிருந்து வார  இதழாக வெளிவரத் துவங்கிய தேசாபிமானி 1946 ஆம் ஆண்டு ஜன வரி 18 அன்று நாளிதழானது.  தேசாபிமானி 80ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சிகளை கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி துவக்கி வைக்கிறார். ஜன வரி 18 அன்று திருவனந்தபுரம் அய்  யங்காளி அரங்கில் (விஜெடி ஹால்) நடைபெறும் சிறப்புமிகு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன், தேசாபிமானி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல  திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறார்.

மேலும்  தேசாபிமானி நாளிதழின் முன்னாள்  முதன்மை ஆசிரியர்கள் எஸ்.ராமச்  சந்திரன் பிள்ளை, வி.எஸ்.அச்சு தானந்தன், எம்.வி.கோவிந்தன், பி. ராஜீவ், முன்னாள் தலைமைப் பொதுமேலாளர்கள் பி.கருணா கரன், இ.பி.ஜெயராஜன், பி.ஜெய ராஜன் மற்றும் கே.மோகனன் ஆகி யோர் கௌரவிக்கப்படுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் விழாவிற்குத் தலைமையேற்கிறார். தேசாபி மானி முதன்மை ஆசிரியர் புத்த லத்து தினேஷன் வரவேற்புரை யாற்றுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலா ளர் கானம் ராஜேந்திரன் வாழ்த் துரை வழங்குகிறார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனாவூர் நாகப்பன், அமைச்சர் வி.சிவன்குட்டி, கட்சி யின் திருவனந்தபுரம் மாவட்ட செய லாளர் வி.ஜோயி எம்.எல்.ஏ, திரு வனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்தி ரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். ரெஸி டெண்ட் எடிட்டர் வி.பி.பரமேஸ்வ ரன் நன்றி கூறுகிறார்.