சென்னை, மே 3- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 5 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவர்கள்ற எழுது கிறார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 3119 மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள் ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 6 ஆம் தேதி தொடங்கு கிறது. இந்த தேர்வு 3,936 மையங்க ளில் நடைபெறுகிறது. மொத்தம் 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். பொதுத்தேர்வில் எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி யுள்ளது. 12 ஆம் வகுப்பு திருப்பு தல் தேர்வு கடந்த மாதம் நடந்த போது ஒரு சில இடங்களில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்ன தாக வெளியாகி கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. தொடர்ந்து நடந்த 3 தேர்வுகளின் வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனவே, வினாத்தாள்கள் அனைத்தும் சென்னையிலிருந்து தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை இரவு அந்த வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்தன. அன்றே அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்க ளில் தேர்வுத்தாள்கள் பலத்த பாது காப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
அந்த அறை அருகே தேவை யில்லாமல் யாரும் செல்லக் கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது. குறிப்பாக செல்போனுடன் வினாத்தாள் பாதுகாப்பு அறைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத் தப்பட்டு உள்ளது. தேர்வு பணியில் ஈடுபடக் கூடிய ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் மட்டுமின்றி ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வு தொடங்கு வதற்கு முன்னதாக 30 நிமிடங் களுக்குள் வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவிற்கு வினாத்தாள் பாது காப்பு அறைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத் தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் அறை ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளது. “ஸ்ட்ராங் ரூம்” என்று செல்லக் கூடிய அந்த அறையில் வினாத் தாள் கட்டுகள் வைத்து பாதுகாக் கப்படும். அந்த அறையை 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும், வினாத்தாள் அறை யின் உள்பகுதியிலும் வெளிப் பகுதியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை. மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.