சென்னை, டிச.29- 16 முறைசாரா தொழிலாளர் நலவாரி யங்களுக்கும் முத்தரப்புக் குழுக்களை உட னடியாக அமைப்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜன.3 இல் மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு மாநிலக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. சிஐடியு மாநில நிர்வாகக் குழு கூட்டம் டிசம்பர் 26, 27 தேதிகளில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டி பாபு, உதவி பொதுச் செயலாளர்கள் கே. திருச்செல்வன், எஸ்கண்ணன், கே.ஆறுமுக நயினார், துணைத் தலைவர் ஆர்.சிங்கார வேலு உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கட்டுமானம், பனை மரத் தொழிலாளர் நலவாரியங்களில் மட்டும் முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதர 16 முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கும் முத்தரப்புக் குழுக்களை உடனடியாக காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அமைக்க வேண்டும்.
நலவாரியங்கள் மூலம் பணப் பயன்கள் வழங்குவதில் காலம் தாழ்த்தக்கூடாது. ஓய்வூதியம் பெற்று வரு பவர்களின் சுய விபரங்களை ஆய்வு செய்வ தன் பெயரால் 11 விபரங்கள் சேகரிக்கப் படுகின்றன. 10 லட்சத்திற்கும் மேல் சொத்து உள்ளதா, இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் உள்ளனவா? என்பன போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. ஓய்வூதிய உரிமை யை ரத்து செய்யும் உள்நோக்கம் கொண்ட தாக தெரிகிறது. வழங்கி வரும் ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படு வது பொருத்தமற்றது. விசாரணை என்ற பெயரில் முறைச்சாரா தொழிலாளர் சட்டத் தின் கீழ்ஓய்வூதியம் திட்டம் பெற்று வரும் தொழிலாளரின் அடிப்படை உரிமைக்கு முரணானது. எனவே விசாரணை நடைபெறு வதால் ஓய்வூதியம் மறுக்கும் வகையிலான விபரங்கள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக் கும் இலவச பொங் கல் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். ஆன் லைன் மூலம் பதிவை எளிமையாக்கி பதிவு மற்றும் நலவாரிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி 3 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.