சென்னை, ஜூலை 4- 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கி யுள்ள நிலையில், இலங் கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று வெளி யுறவுத்துறை அமைச்ச ருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச் சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீன வர்கள், இலங்கைக் கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) கைது செய்யப் பட்டுள்ள நிலையில், அவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை களை விரைந்து எடுக்கக் கோரி தமிழக முதல்வர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு திங்களன்று (ஜூலை 4) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 15.6.2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத் திற்குப் பிறகு தமிழக மீன வர்கள் மீன்பிடிக்கத் தொடங் கியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படை யினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர் களை அச்சுறுத்தும் வகை யில் உள்ளதோடு, மாநிலத் தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இலங்கைக் கடற்படை யினரால் சிறைப்பிடிக்கப் ப்பட்டுள்ள 12 மீனவர்க ளையும், அவர்களது மீன் பிடிப் படகினையும் உடனடி யாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயி லாக விரைந்து நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக் கிறார்.