states

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்

சென்னை,ஏப்.11- அதிமுக பொதுச்செயலாளர் பதவி யிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமை யியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இத னால் அமமுக கட்சியினர் மற்றும் சசி கலா ஆதரவாளர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சசி கலா ஏற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்ட னை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர் ந்து 2017 செப்டம்பர் 12 அன்று நடை பெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செய லாளர் பதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இதனை எதிர்த்து சசிகலா சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 1.11.2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா மனுவிற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனி சாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து  செய்ய வேண்டும் என்று கூறியிருந்த னர். இதற்கு சசிகலா தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இருதரப்பு வாதங்களும் முடி வடைந்தன.இந்நிலையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீதேவி ஏப்ரல் 11 திங்களன்று அளித்த தீர்ப்பில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவி யில் இருந்து நீக்கி அதிமுக  பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சசிகலா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.  இந்த தீர்ப்பால் அதிமுகவை கைப்பற்றும் சசிகலாவின் நோக்கம் பின்னடைவை சந்தித்துள்ளது.