states

img

10 ஆண்டாக போனஸ் வழங்காத சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

முதல்வர் தலையிட  அ. சவுந்தரராசன் வேண்டுகோள்

சென்னை, நவ.10- சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர் களுக்கு போனஸ் - கரு ணைத் தொகை  வழங்க, முதல்வர் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தனது அறிக்கை  வருமாறு: சென்னை மெட்ரோ ரயில், கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள லிமி டெட் நிறுவனமாகும். ஆனால், இதில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 10  ஆண்டுகளாகவே ஒரு பைசா கூட போன சாக வழங்கப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான போக்கு வரத்துக் கழகங்கள் போன்ற கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், மின் வாரியத் தொழிலாளர்களுக்கும், குடிநீர், டாஸ்மாக், சிவில் சப்ளைஸ் போன்ற தொழில்களில் பணியாற்றுவோருக்கும் 10  சதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் ரயில்வேயில் பணியாற்றுவோருக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில், மாண்புமிகு தமிழக முதல்வரின் கீழ் செயல்படும் நிறுவன மாகும். ஆனால், இந்த நிறுவனம் தொழிலா ளர் பணிநிலைகள் தொடர்பான எந்த சட்டத்தையும் துளியளவும் மதிப்பதில்லை. நிலையாணைகள் சட்டம்,  பிழைப்பூதியச் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்தகராறு சட்டம் போன்ற அனைத்து  சட்டங்களும் தங்களுக்குப் பொருந்தாது என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இது  சட்டத்தின் ஆட்சி நிலவுகிற நமது நாட்டிற்கு  ஒவ்வாத சர்வாதிகார போக்காகும். இந்த நிறு வனம் தனது இயக்குநர் அவையில் CMRL HR Manual என்று ஒரு விதியை உருவாக்கிக்  கொண்டு அதுதான் இந்த நிறுவனத்தில் பொருந்துகிற ஒரே சட்டம் என்று கூறுகிறது.  இது எந்த சட்ட அங்கீகாரமும் இல்லாத  தன்னிச்சையாக சுயமாக போட்டுக் கொண்ட விதியே தவிர வேறல்ல. இதன்  மூலம் நாடாளுமன்றமும், தமிழக சட்டமன்ற மும் நிறைவேற்றிய சட்டங்களையும் விதி களையும் மீறிச் செயல்படுகிறார்கள்.

இதே வகையில்தான் சி.எம்.ஆர்.எல் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டு வருகிறது. போனஸ் சட்டத்தின் உச்சவரம்பை கணக்கில் கொள்ளாமல்தான் அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் கரு ணைத் தொகையாக தீபாவளி நேரத்தில்  வழங்கப்படுகிறது. இதர அரசு நிறுவனங்க ளில் செயலில் இருக்கும் இந்த நியதியும் தங்களுக்குப் பொருந்தாது என்று சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் இந்த  தன்னிச்சைப் போக்கை மாண்புமிகு முதல்வர் கைவிடச் செய்து சட்டவரை யறைக்குள் செயல்பட வைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். தங்கள் துறையைச் சார்ந்த இந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் கருணைத்  தொகை வழங்கிட ஆணையிட வேண்டும் என்றும் மாண்புமிகு முதல்வரை கேட்டுக்  கொள்கிறேன். இதுகுறித்து முதல்வருக்கு ஏற்கெனவே மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.