states

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 17- தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் புதன்கிழமை (மே 17) ஒரு  சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர்,  தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடல்  மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு  செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.