states

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி-வளர்ச்சி மையம் அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை,ஏப்.13- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை மீது விவாதம் நடை பெற்றது. அப்போது புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச்சர் மெய்ய நாதன், “ தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக கட்டி டத்தின் அருகில் சுற்றுச்சூழல் பாது காப்பு, ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான சுற்றுச்சூழ லுக்கு உகந்த பொருட்கள் போன்ற  பசுமை திட்டங்களுக்கான ஆராய்ச்சி  மற்றும் வளர்ச்சி மையம் மற்றும் மேம் பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற் கொள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைக்கப்படும்”என்றார். தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தை சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக உருவாக்குவதற்காகவும், இளைய தலைமுறையினர் மத்தியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தற்போதுள்ள சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக மாற்றி அமைக்கப்படும். பசுமை நகரக் குறியீடு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகள் கரிம மாசு இல்லாத நகராட்சிகளாக உருவாக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கின்ற மற்றும் மேம்படுத்துகின்ற 100 நபர்களுக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாது காவலர் விருது ஒரு நபருக்கு ரூபாய்  1 லட்சம் வீதம் ஒரு கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.