கள்ளக்குறிச்சி,ஜூலை 27- கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 5 பேரை சிபிசிஐடி காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்(48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்(57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்களை பிணையில் விட வேண்டும் என்ற 5 பேரின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதி, வழக்கை முப்பது நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின்னர் ஒருநாள் காவலில் மட்டுமே சிபிசிஐடி விசார ணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி ஜூலை 27 ஆம் தேதி 12 மணி முதல் வியாழக்கிழமை மதியம் 12 மணி வரை விசாரணை 5 பேரிடமும் விசாரணை நடைபெறு கிறது. விசாரணை முடிந்து மீண்டும் விழுப்புரம் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.