states

செப். 18- காவிரி ஆணைய அவசரக் கூட்டம்

புதுதில்லி, செப். 15 - காவிரியில் தமிழ கத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுத்துவரும் நிலையில், செப்டம்பர் 18 அன்று அவசரக் கூட்டத்தை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், தமிழ்நாடு, கர்நா டகம், கேரளம், புதுச்சேரி  மாநிலங்களின் பிரதிநிதி கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. காணொலிக் காட்சி முறையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும், வாய்ப்புள்ள பிரதிநிதிகள் நேரிலும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது. காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள் ளது. இந்த வழக்கு, செப்ட ம்பர் 21  அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.  இந்நிலையிலேயே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம், ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் செப்டம்பர் 18 திங்களன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.செவ்வாயன்று கூறிய ஒழுங் காற்றுக் குழு 5ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.