states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2021 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் காத்திருப்பு பட்டியல் பயணச்  சீட்டு ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.1,229 கோடி வருவாய் கிடைத் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் அதிகரித்து வரும் அரசியல் வன்  முறைகளை கட்டுப்படுத்த தேர்தல் ஆணை யம் உடனடியாக தலையிட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் ஜன் அதிகார் கட்சி (ஜேஏபி) தலைவர் பப்பு யாதவ் புதனன்று தனது கட்சியை காங்கிர ஸில் இணைத்தார்.

மணிப்பூர் மாநிலம் தம்மெங்லாங் என்ற இடத்தில் செவ்வாயன்று மதியம் 2:23 மணி  அளவில் பூமிக்கடியில் 15 கிமீ ஆழத்தில் 3.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட வில்லை.

ஜார்க்கண்ட் மாநிலம் மண்டு தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜெய் பிரகாஷ் பாய் படேல்  அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். 

ஜூலை 7 அன்று நடைபெறவிருந்த நீட் முது நிலை நுழைவுத் தேர்வு ஜூன் 23 அன்றுக்கு  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்  றும், ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15 வரை கலந்  தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீதிமன் றத்தின் உத்தரவை மதிக்கிறோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமா ளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகர்  பகுதியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். 

சீட் பிரச்சனை காரணமாக பாஜகவுடன் மோதல்  ஏற்பட்ட நிலையில், ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பசுபதி பரஸ் ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர்  கவனித்து வந்த துறையை (உணவு பதப்படுத்து தல் துறை) ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு  கவனிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தர விட்டுள்ளார்.