சென்னை, ஜன. 16- இந்தியாவின் 41 வழித்தடங் களை இணைக்கும் வகையில் சுமார் 90 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்து ள்ளன. அடுத்தகட்டமாக 20 வழித்தடங்கள் தயாராக காத்திரு க்கின்றன. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 8 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சென்னை - பெங்களூரு - மைசூரு வந்தே பாரத் ரயிலும் ஒன்று. இதே வழித்தடத்தில் தான் தென்னிந் தியாவின் முதல் புல்லட் ரயிலை இயக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. நேஷனல் அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கீழ்தான் நாட்டின் முதல் புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் வழித்தடத் தில் விடுவதற்கு பணிகள் நடை பெற்று வருகின்றன. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 விழுக்காடு முழுமை பெற்று தூண்களும், கிரிடர்களும் என உயர்மட்ட ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை - மைசூரு வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக பல்வேறு கிராம மக்களிடையே பேச்சுவார்த்தைகள் நடை பெற்று வருகின்றன. சமீபத் தில் கூட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 41 கிராமங் களில் உள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 5 மடங்கு விலை தருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் முக்கி யமான ஒரு நடவடிக்கையை தெற்கு ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்வே ஆகியவை கையில் எடுத்துள்ளன. சென்னை - பெங்களூரு வழித் தடத்தில் ரயிலின் வேகத்தை அதிக ப்படுத்துவது. இதற்காக தண்டவாள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
முன்னதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வருகையால் சென்னை - பெங்களூரு வழித்த டத்தில் ரயிலின் வேகம் அதி கரிக்கப்பட்டது. அதன்படி, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீட்டராக பயண வேகம் அதிகரித்தது. அடுத்தகட்டமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருந்து 160 கி.மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பெங்களூரு - ஜோலார் பேட்டை மார்க்கத்தில் தென் மேற்கு ரயில்வேயும், ஜோலார் பேட்டை - சென்னை மார்க்கத் தில் தெற்கு ரயில்வேயும் மேற் கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து விட்டால் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்ட ராக மாறிவிடும். இந்நிலையில் ரயிலின் வேகம் மணிக்கு 130 கி.மீட்டரை தாண்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பாலங்களை மறுகட்டமைப்பு செய்வது அல்லது வலுப்படுத்து வது, தடுப்பு வேலிகள் அமைப் பது, லெவல் கிராசிங்கை அகற்று வது, விளைவுகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவும் புல்லட் ரயிலை இயக்க வேண்டும் எனில் ரயில் நிலையங்களின் எண்ணிக் கையை குறைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் படிப்படி யாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்னை - பெங்களூரு - மைசூரு புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்வதற்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.