states

img

கல்லூரி பேராசிரியருக்கு விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்

தூத்துக்குடி, செப்.25- தில்லியில் சனிக்கிழமையன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் -ல் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக் குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர் ஆ. தேவராஜிக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார். தேசிய நாட்டு நலப் பணித் திட்ட நாளாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் நாட்டில் சிறப்பாக சேவையாற்றிய 10 நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர் களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படு வது வழக்கம்.  அதன்படி, 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட அணியாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் 54  ஆவது அணியும், சிறந்த அதிகாரியாக அணி யின் திட்ட அலுவலரும், கல்லூரி வர லாற்றுத் துறை தலைவருமான ஆ.தேவ ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் விருதை குடிய ரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி னார். அப்போது, கல்லூரி முதல்வர் து.நாக ராஜன் உடனிருந்தார். மாற்றுத்திறனாளி களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது,

1000 யூனிட் ரத்ததானம் செய்தது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்தது, மருத்துவ முகாம்கள், கொரோனா விழிப்பு ணர்வு முகாம்கள், சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்தியது, கேரள மாநி லத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது நிவாரணப் பொருள்கள் அளித்தது ஆகி யவை குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்த தாக விருது வழங்கும் விழாவில் தெரி விக்கப்பட்டது. விருது பெற்ற பேராசிரியர் ஆ.தேவ ராஜ் கூறியதாவது:  நாட்டின் முதல் குடிமகனான இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது பெற்றது மேலும் பல்வேறு சேவைகளை செய்ய ஊக்கம் அளித்துள் ளது. விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகம், நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பிறகு பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரி ஒன்றுக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருப்பது இதுவே முதல்முறையா கும்.

;