திருச்சிராப்பள்ளி, மே 27- சிஐடியு சார்பில் திருச்சியில் நடைபெறும் பிரச்சார நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டத்திற்கு வருபவர் களுக்கான பேருந்து வழித்தடங்கள் குறித்து அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டின் 7 முனைகளிலிருந்து வரும் நடைபயண பிரச்சார நிறைவு, பேரணி பொதுக்கூட்டம், ஊர்வலம் திருச்சி உழ வர்சந்தையில் மே 30 அன்று மாலை 4 மணிக்கு துவங்கி பட்டாபிராமன்பிள்ளை தெரு, தென்னூர் ஹைரோடு வழி யாக புத்தூர் நால்ரோடு பொதுக்கூட்ட திடலை அடையும். மத்திய பேருந்து நிலையம், ரயில்நிலையம் வழியாக வருபவர்கள் தில்லைநகர், உறையூர் வழியாக செல்லும் நகர பேருந்தில் மதுரம் மருத்துவமனை நிறுத் தத்தில் இறங்கி நடந்து வரலாம். வாகனத்தில் வரு பவர்கள் நீதிமன்ற எம்ஜிஆர் சிலை வழியாக உழ வர்சந்தை வரலாம். சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பேருந்தில் வரு பவர்கள் தில்லைநகர், உறையூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி மதுரம் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி உழவர்சந்தை வரலாம். வாகனத்தில் வருபவர்கள் தில்லை நகர் கே.எம்.சி வழியாக உள்புறம் வந்தால் உழவர்சந்தை வரலாம். மேலும் விபரங்களுக்கு 9443191437, 960088,1977, 99526 39349 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.