சென்னை, மே 18- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3 அன்று விமரிசையாக கொண்டாடப்பட வுள்ளது. இதையொட்டி, வடசென் னையில் தோழமை கட்சியினர் பங்கேற் கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தலைவர் திரவுபதி முர்மு வருகிற 5 ஆம் தேதி கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் கட்டப் பட்டுவரும் பன்னோக்கு உயர்தர மருத் துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இது தொடர் பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாக்கள் தொடர் பாக, முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (மே 19) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.