states

பத்திரிகையாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு பத்திரியாளர் சங்கம் (டியுஜெ),  சென்னை பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு  உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர் சங்கம் ஆகிய பத்திரிகையாளர் அமைப்புகளது கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.  அதன் விபரம் வருமாறு: உயிர் நீத்த பத்திரிகையாளர்கள்,  ஊடக வியலாளர்கள் குடும்பங்களுக்கு தலா பத்து  லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கி யது,  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரிகை யாளர்கள் மீது போடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து ஆணையிட்டது, பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்பட்டு வந்த குடும்ப நிதியை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணைப் பிறப்பித்து அமல்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கை களுக்கு  தமிழக முதல்வருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.   அதேபோல முக்கியமான கோரிக்கைகளை, பத்திரிகையாளர்களின் பல்வேறு தேவைகளை, சிக்கல்களை, ஊதிய முரண்களை, பணியிட தகராறுகளைத் தீர்க்க அதிகாரமுள்ள ‘பத்திரிகை யாளர் ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் சிறப்பான தாக மாற்றியமைக்கப்பட்டு – தற்போதுள்ள ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகை யாளர்களுக்கும் சேதமுற்ற உபகரணங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; மதுரை, திருச்சி, கோவை, சேலம். நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்குக் குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்

பறிபோன நலச்சட்டங்கள்

பணிச்சுசூழலால் மாறுபட்ட தொழிலாளர்களு க்கு என உருவாக்கப்பட்டிருந்த தனித்தனி  சட்டங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் புதிய  தொழிலாளர் சட்டத் தொகுப்பில் அகற்றப் பட்டுள்ளன. இவற்றில் பத்திரிகையாளர்களுக்கு என நடைமுறையில் உள்ள உழைக்கும் பத்திரி கையாளர் சட்டம் -  1955 உழைக்கும் பத்திரிகை யாளர் ஊதியச் சட்டம் - 1958 மற்றும் ஊதியக் குழுவும் அகற்றப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் களின் பாதுகாப்பு அரணாக இருந்த இந்த சட்டங் களை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசை வலி யுறுத்தி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அரசின் அடையாள அட்டை 

2024ஆம் ஆண்டிற்கான பத்திரிகையாளர் கள் அடையாள அட்டை பெறுவதற்கான வழி முறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  இது சிறு,  குறு பத்திரிகையாளர்களை பாதிப்பதாக அமைந்துள்ளது. எனவே கடும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

நல வாரிய நிதி ஆதாரம்

பத்திரிகையாளர் நலவாரியத்தின் செயல்பாடு கள் வெளிப்படையாக அமைய வேண்டும். மற்ற நலவாரியங்களைப் போன்று பத்திரிகை யாளர் நல வாரியத்திலும் முத்தரப்பு பிரதிநிதித்துவ த்தில் பத்திரிகையாளர் சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பத்திரிகை யாளர் அடையாள அட்டை வழங்குவதிலும் நல வாரிய பயன்களை பெறுவதிலும் பெருவாரியான பத்திரிகையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசின் அணுகுமுறை அமைய வேண்டும்.

ஓய்வூதியம் மறுக்கக் கூடாது

செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்று வோரும் ஊடகவியலாளர்களே. ஆனால், தொலைகாட்சியில் பணிபுரியும் செய்திளாளர்கள் ஊதியக்குழு வரம்பிற்குள் வராததால் அவர் களுக்கு ஓய்வூதியம் வழங்க இயலவில்லை என்று  நலவாரியம் கூறியுள்ளது வேதனையாக உள் ளது. பட்ஜெட் கூட்ட தொடரில் காட்சி ஊடகங்களை ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும்.

மீடியா கவுன்சில்

தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற இரு அவையின் உறுப்பினர்களைக் கொண்டு ஊதியக்குழுவில் ஊடகங்களை சேர்க்கவும், “பிரஸ்கவுன்சில்” என்கிற அமைப்பை “மீடியா கவுன்சில்” என்று பெயர் மாற்றம் செய்ய இந்தியா விற்கே வழிகாட்டியாக  தமிழ்நாடு செயல்பட வேண்டும்.  அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர முடியும் என்று  வகுக்கப்பட்டுள்ள விதியால் தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தாலுகா, ஊரகத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 80 விழுக்காடு பத்திரிகையாளர்கள் உறுப்பினராக சேரமுடியாத நிலை உருவாகியுள்ளது.  பத்திரிகையாளர்கள் அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். 

ஓய்வூதியம்

பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை ஏற்றங்களுக்கு ஏற்ப பத்திரிகையாளர் களின் ஓய்வூதிய தொகை ரூ.12ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.15ஆயிரமாக வழங்க வேண்டும். நடப்பு கூட்டத் தொடரிலேயே “பத்திரிகையாளர் பாதுகாப்புச் சிறப்புச் சட்டத்தை” தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்”.

காப்பீட்டு திட்டம்

பத்திரிகையாளர்கள் உடல்நலக்குறை வினால் இயற்கை எய்தும் நிகழ்வுகள் அதிகரித்தபடி உள்ளது.  ஆண்டு தோறும் பத்திரிகையாளர் களுக்கு முழு உடல் சோதனை முகாமும் அனைத்து பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தி னர் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் சிறப்பு காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும்.  இந்த திட்டத்தின் பலன் ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர்களுக்கும் சென்று சேர வேண்டும். கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் சொந்த ஊருக்கு திரும்ப ஆம்னி பஸ்நிலையத்தில் இளவயதினிலே அகால மரணமடைந்த ஈடிவி செய்தியாளர் லெனின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் குடும்ப நிதி வழங்கவேண்டும்.