states

img

நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் சதி வளர்ந்து வருகிறதாம் எதிர்க்கட்சியினர் போல பேசும் அமித் ஷா

2 நாட்களுக்கு முன்பு தில்லியில் காவல்துறை நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய காவல்துறை நினை விடத்தில், பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி னார்.  தொடர்ந்து அவர் பேசுகையில்,”மத உணர்வுகளை தூண்டும் வகையிலான சதிகள், பயங்கரவாதம், சைபர் கிரைம்,  ஆயுதக் கடத்தல், டிரோன்கள் மூலமான தாக்குதல், போதைப் பொருட்கள் கடத்தல், செயற்கை நுண்ணறிவின் தவ றான பயன்பாடு போன்ற சவால்கள் வளர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 216-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியின் போது கொல்லப்பட்டனர்” என அமித் ஷா கூறினார்.  மோடி பிரதமர் ஆன பின்பே நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் வகை யிலான சதி முதல் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து சம்ப வங்கள் அதிகரித்து வருகின்ற்ன. மத மோதலை தூண்டிவிடுபவர்கள் அனைவ ரும் பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். இது நாடறிந்த விசயம். நாட்டில் இதுவரை இல்லாத வகையில் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வரு கிறது. இது வேறெங்கும் இல்லை. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் தான். தற்போது அதானி கைக்கு துறைமுகங் கள் குத்தகைக்கு சென்ற பின் ஒவ்வொரு வாரமும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறி முதல் செய்யப்பட்டு வருகிறது. இவை யெல்லாம் மோடி ஆட்சியின் கீழ் தான் நிகழ்ந்து வருகிறது. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ எதிர்க்கட்சியினர் போல பேசியுள்ளார். இது இவர்களது ஆட்சியின் திறமை யின்மையை திசை திருப்பும் நோக்க முடையது என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.