states

சிறுபான்மை மாணவர்களின் கல்விக்கு உதவி

சென்னை,டிச.21- சிறுபான்மைச் சமுதாய மாணவர்களின் கல்விக்கு தமிழ்நாடு அரசு கைகொடுக்கும் என்று அறிவித்த தமிழக முதல மைச்சருக்கு மனிதநேய மக்கள்  கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாண வர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்திலி ருந்து வழங்கி வந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி  உதவித் தொகையை திடீரென்று  இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது. அநீதியான இந்த முடிவை அனைத்து மதச்சார்பற்ற கட்சி களும் கண்டித்தன. இந்த முடிவை கண்டித்து தமிழ் நாட்டின் முதலமைச்சர் டிசம்பர்  7.2022அன்று பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதினார். நிறுத்தப்பட்ட  கல்வி உதவித் தொகையை மீண்டும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரினார். ஆண்டு வருமானம் ஒரு  லட்சத்திற்கு குறைவாக இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மாண வர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முற்பட்ட சாதிக ளில் குறைந்த வருவாய்ப் பிரிவினர் என்று ஆண்டு வரு மானம் 7 லட்சம் உள்ளவர்க ளுக்கே 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தந்த ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாயங்களில் கல்வியில் மிகவும் பின் தங்கி இருக்கின்ற சிறுபான்மைச் சமுதாய மாணவர்கள் பெற்று வந்த இந்த கல்வி உதவித் தொகையை திடீரென நிறுத்தி, அதில் அதன் வன்மமும் வெறுப் பும் வெளிப்பட்ட தாகவே அறிய முடிகிறது .

2021-2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 559 மாணவர்களுக்கு ரூ. 86.76 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு திடீரென இந்த உதவித் தொகையை நிறுத்தியது. சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர் காலத்தை இருளாக்கும் செயலாக இருந்தது. அந்த ஏழை  எளிய மாணவர்களுக்கு இந்த  உதவித்தொகை மிகப் பெரிய ஊக்கமாகவும் பள்ளிக் கல்வியை எழுதி முடிப்பதற்கு உதவும் சாதனமாகவும் உதவியது. இந்நிலையில், ஒன்றிய அரசு   நிறுத்தி வைத்துவிட்ட உதவித்  தொகையை உடனே மீண்டும்  வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித்  தொகையை வழங்க மறுத்து விட்டால் தமிழ்நாடு அரசு  வழங்கும் என்று கிறிஸ்த்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய  அன்பின் கிறிஸ்மஸ் பெருவிழா வில் ஆற்றிய உரையின் போது அறிவித்திருக்கிறார். சமூகநீதியை வீழ்த்துகின்ற ஒரு வழியே கல்வியை பறிப்பதா கும். சமூக நீதியை உறுதிப் படுத்துவதற்கான உன்னத வழி கல்வியை இளைய தலை முறைக்குக் கொடுப்பதாகும். தமிழ்நாடு சமூகநீதி மாநிலம் இளைய தலைமுறை கல்வியில் சிறந்து விளங்கினால் தான் மதவெறி பாசிசம் அகன்ற மனித  நேயம் மிகுந்த தமிழ்நாடு அமை யும் என்பதை உணர்ந்து  எளியோரின் கல்விக்காக கைகொடுத்து இருக்கின்ற  தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.