சென்னை, ஜன.17- தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அருந்ததி யர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது; சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவேண்டும் எனும் சமத்துவ நோக்கோடு பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சி யில் இருந்த போது வழங்கினார் டாக்டர் கலைஞர். கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன்றைக்கு உரிய பிரதிநிதித்து வத்தைப் பெற்று வருகிறார்கள் என்ப தை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மருத்துவக் கல்வியில் அருந்ததி யர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-19-ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. திமுக ஆட்சியில் 2023-2024-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததியர் சமூக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள். பல் மருத்துவப் படிப்பை பொறுத்தவரை 2018-2019-ம் ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களே! அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இய லாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமே பல் மருத்துவம் பயின்றார்கள். இந்த அவல நிலை 2023-24-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாற்றமடைந்தது. 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாண வர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதி நிதித்துவம் முழுமையாக கிடைத்தது. பொறியியல் படிப்புகளைப் பொறுத்த வரை 2009-10 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை, 2023-24 ஆம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக் காட்டினர் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அரசு எடுத்த முன்னெடுப்பு களால்தான், அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதி மன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தர விட்டது. இதன்மூலம், பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு செயல்படுகிறது திமுக அரசு. சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.