states

வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியிருக்கும்

சென்னை, அக்.27- வடகிழக்கு பருவமழை அக்.29 அன்று தொடங்க வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை அதிகாரி பாலசந்திரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அவர், “தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா பகுதி களில் வடகிழக்கு பருவமழை சனிக்கிழமையன்று (அக்.29) தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நவம்பர் 4  வரை மழை படிப்படியாக அதிகரிக் கும்” என்றார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும், வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். சிட்ரங்  புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட 45 விழுக்காடு அதிக மாக பெய்தது. அதுபோல வட கிழக்கு பருவமழையும் அதிகமாக பொழியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். கனமழைக்கு வாய்ப்பு அக். 29 அன்று கடலூர், அரிய லூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுரை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென் காசி, தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடிமின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங் களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.