கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திண்டுக்கல், நவ. 22 - அதானி என்பவர் ஒரு முகமூடி தான், ஊழ லின் உண்மையான முகத்திற்குச் சொந்தக்காரர் பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பாஜக அரசும் தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கூறியுள்ளார். அதானி தொடர்பான ஊழல் முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திண்டுக்கல் லில் வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறிய தாவது: அதானி ஊழலும் மோடி அரசின் மெளனமும் அமெரிக்க நிறுவனங்களிடம் பெற்ற ரூ. 6,300 கோடி ரூபாய் அளவிற்கான முதலீட்டைப் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு அதானி ரூ. 2,029 கோடி லஞ்சம் கொடுத்துள் ளார். இதற்காக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. ஆனால், அவர் மீது இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான ‘செபி’யோ, நிதி முறைகேடு தொடர்பாக விசாரிக்கும் அமலாக்கத்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத் தக்கது. அதானி - அம்பானி மோசடி நிறுவனங் களுக்கு முழு ஆதரவாக மோடி அரசு செயல்படு கிறது. அதனைக் கைவிட்டு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டும். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் 27, 28 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது
மின்சார விநியோக முறைகேடு
ஒன்றிய பாஜக அரசானது, தனியார் நிறு வனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகிக்கிறது. இதுதொடர்பான முறை கேடு குற்றச்சாட்டு பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ‘நாங்கள் அதானியுடன் உடன்பாடு செய்துகொள்ளவில்லை’ எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும். இந்த முறைகேட்டால் சிறு, குறு நிறுவனங்களும் பொதுமக்களும்தான் பாதிக்கப்படுவார்கள். திசைதிருப்பும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை திணிக்க சதி நடக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டா ட்டம் போன்ற அடிப்படை பிரச்சனைகளை கவனிக்காமல், மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது மோடி அரசு.
வேலைவாய்ப்பு பிரச்சனைகள்
வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரை போதிய காலம் நடத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ள ஆயிரக் கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். சாம்சங் தொழிலாளர் உரிமைப்போராட்டம் சாம்சங் தொழிலாளர் சங்கப் பதிவை அரசு மறுக்கிறது. இதனால் தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். சங்கப் பதிவு அனு மதி வழங்கினால் வழக்கு வாபஸ்பெறப்படும்
போதைப்பொருள் பிரச்சனையும் வன்முறைகளும்
ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்து வர்கள் மீதான தாக்குதல்களுக்கு போதைப் பொருள் பழக்கமே காரணம். காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக செயல்படுகிறது. ஜனநாயக போராட்டங் களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, போதை விற்பனையை தடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அரிட்டாபட்டி கனிம ஏல முறைகேடு தமிழக அரசு பல்லுயிர் பாதுகாப்பு மைய மாக அறிவித்த மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில், மாநில அரசின் அனுமதியின்றி ஒன்றிய அரசு கனிம வள ஏலத்தை நடத்தி யுள்ளது. இந்த ஏலத்தை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி? அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அக்கட்சியை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. திண்டுக்கல் சீனி வாசனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்பேட்டியின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், என். பாண்டி, மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.