states

மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 கிராமங்களில் தீண்டாமை பாகுபாடு கள ஆய்வு

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு பேரவை முடிவு மயிலாடுதுறை, நவ.17 - மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட சிறப்பு பேரவை காமராஜர்  சாலையிலுள்ள தோழர் கோ.பாரதி மோகன் நினைவகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.மேகநாதன் தலைமையில் நடைபெற்ற பேரவை யில் மாநில இணைச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, அனைத்துத்  துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, ஜாக் கூட்டமைப்பின் செயலாளர் த.ராயர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் து.இளவரசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் த.லீலாவதி, தமுஎகச மாவட்டச் செய லாளர் பேராசிரியர் பாலசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், இந்திய  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர்  மணிபாரதி ஆகியோர் உரையாற்றினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 100 கிராமங்களைத் தேர்வு செய்து தீண்டாமை பாகுபாடு குறித்த கள ஆய்வினை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அமைப்பில் 27 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத் தலைவராக ஏ.ஆர்.விஜய்,  செயலாளராக சி.மேகநாதன், பொரு ளாளராக அ.நேதாஜி, துணைத் தலை வர்களாக ஜி.ஸ்டாலின், த.லீலா வதி, து.இளவரசன், துணைச் செய லாளர்களாக எம்.கலைச்செல்வன், எம்.ஐயப்பன், மணிபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  சிறப்பு பேரவையில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.