states

தொழிற்சாலை திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக!

முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

சென்னை, ஏப்.18- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12.4.2023 அன்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  அறிமுகம் செய்த தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன்  எழுதிய கடிதத்தை கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி, முதல மைச்சரிடம் ஏப்ரல் 18 அன்று சட்டப்பேர வையில் நேரில் அளித்துள்ளார்.  முதல்வரிடம் அளித்த கடிதம் வரு மாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 12.4.2023 அன்று தொழிற்சாலைகள் சட்  டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக அறி முகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தமானது தொழிலாளர்களது உரிமை, போராட்டங்களுக்கு முற்றிலும்  முரணாகவும், எதிராகவும் தினசரி வேலைநேரம் உள்ளிட்ட வேலை நேரம்  தொடர்பான தொழிலாளர்களின் உரிமை கள் அனைத்தையும் இந்த சட்டத் திருத்  தம் இல்லாமல் செய்துவிடும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, தொழிற்சாலைகள்  சட்டத்தில் அவசர நேரங்களிலும், தேவை யான தருணங்களிலும், தொழிற்சாலை ஆய்வாளரின் அனுமதி பெற்று சில விதி விலக்குகளை பெறுவதற்கு தொழிற் சாலைகள் சட்டம் வழிவகை செய்தி ருக்கும் நிலையில், எவ்வித கேள்வி கேட்  பாரின்றி முதலாளிகள் தங்கள் விருப்பம் போல தொழிலாளர்களை சுரண்டு வதற்கு தங்கு தடையற்ற அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் முதலாளிகளுக்கு வழங்குகிறது.

சட்டப்பேரவையில் முன்மொழியப்  பட்டுள்ள இச்சட்டத் திருத்தத்திற்கான நோக்கங்கள் குறித்த விளக்கவுரையில் இத்திருத்தம் தொழிலகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின்  அடிப்படையில் மேற்கொள்ளப்படு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கை களை ஏற்று தொழிலாளர்களின் நலச் சட்டங்களை திருத்துவது அவர்களின் உரிமைகளை பறிப்பது மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கும் என்  பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த சட்டத்திருத்தம் தொழிலா ளர்கள் நீண்ட நெடுங்காலமாக போராடி  பெற்ற 8 மணி நேர வேலை என்பதை இல்லாமல் செய்வதாகும். மே தினம் என்பதே தொழிலாளர்கள் 8 மணி நேர  வேலையை சட்டப்பூர்வமாக போராடி  வெற்றிபெற்றதை குறிப்பதற்கான தினமாகும். இந்த ஆண்டு இந்தியாவி லேயே முதன் முதலில் சென்னையில் தோழர் எம். சிங்காரவேலு அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டதன் 100 ஆவது ஆண்டாகும். தமிழ்நாட்டில் மே தினத்திற்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது  கலைஞர் அவர்களின் அரசு  என்பதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவில் முதலீடுகள் அதிகம்  உள்ள மாநிலங்களில், இத்தகைய சட்டத் திருத்தத்தை முன்மொழிந்திருக்கும் பாஜக அல்லாத ஒரு மாநிலம்  தமிழ்  நாடு மட்டும் தான் என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகிறோம். இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டத்தை  எதிர்த்து மக்களோடு இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே  போராடிக் கொண்டிருந்த போது விவா தமோ, வாக்கெடுப்போ இல்லாமல் முற்றி லும் சர்வாதிகாரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை தமிழ்நாடு போன்ற ஒரு  மாநிலம் நிறைவேற்றுவது எந்த வகை யிலும் நியாயமற்றது. மேலும், இந்த தொழிலாளர் தொகுப்புகள் நான்கையும் எதிர்த்து இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிய போதெல்லாம் அதன் ஒரு பகுதியாக  தொமுச இருந்திருக்கிறது என்பதை கவ னப்படுத்த விரும்புகிறோம். மையத்  தொகுப்பு சட்டம் இந்திய அரசால் நிறை வேற்றப்பட்டும் இதுவரை நடை முறைக்கு கொண்டு வரப்படாத நிலை யில் இதனை நிறைவேற்றுவதற்கு தமிழ்  நாடு அரசு முடிவு மேற்கொண்டுள்ளதா னது நாடு முழுவதும் கடும் விமர்ச னத்திற்கு உள்ளாக்கப்படும் என்பதை யும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, மே தின போராட்டங்கள், தியாகங்கள், பாரம்பரியம் இவை யனைத்திற்கும் எதிரான, தொழிலா ளர்களை முதலாளிகள் சுரண்டுவதற்கு தங்குதடையற்ற அதிகாரமளிக்கும் தொழிலாளர்கள் விரோதமான, பிற் போக்குத்தனமான இந்த சட்டத் திருத் தத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.