சென்னை, ஆக. 23- சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் “ஏ++” தகுதிச் சான்று வழங்கப் பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழ கத்தில் ஆய்வு மேற்கொண்டு 3.59 புள்ளிகளை ‘நாக்’ குழு வழங்கியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857இல் இந்திய சட்ட மன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இந்த பல்கலைக்கழகம், ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அமைக்கும் வழி முறைகளுக்கு உட்பட்டது. மருத்து வம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழ்நாட்டின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பட்டுவிட்டன. தன்னாட்சிக் கல்லூரி களை முதல் முறையாகத் தொடங்கி யது சென்னை பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வர லாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத் துறை என்ற பெயரில் 1914ஆம் ஆண்டு இங்கு வரலாற்றுத்துறை துவங்கப் பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம், மைசூர் பல்கலைக்கழகம் (1916), உசுமானியா பல்கலைக்கழகம் (1918), ஆந்திரப் பல்கலைக்கழகம் (1926), அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (1929), திருவாங்கூர் பல்கலை (1937), உத்கல் பல்கலை (1943), திரு வேங்கடவன் பல்கலை (1954), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1966), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (1971), அண்ணா பல்கலைக்கழ கம் (1978), பாரதிதாசன் பல்கலைக்கழ கம் (1982), பாரதியார் பல்கலைக்கழ கம் (1982), பெரியார் பல்கலைக்கழகம் (1997), டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (1997), திருவள்ளு வர் பல்கலைக்கழகம் (2002) ஆகிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப் பட்டன.
இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று ச.வெ.ராமன் நோபல் பரிசு பெற்றார். வீ.ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட் ராமன், ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ஆகி யோர் இந்திய ஜனாதிபதிகளாக பதவி வகித்தனர். பதஞ்சலி சாஸ்திரி, க.சுப்பாராவ் ஆகியோர் இந்திய தலை மை நீதிபதிகளாகவும், இருந்தனர். ரா.பி.சேதுப்பிள்ளை, சீர்காழி இரா.அரங்கநாதன், ராமானுஜன் ஆகியோர் பேரறிஞர்களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சாதனைகளை உள்ளடக்கிய சென்னை பல்கலைக் கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு “ஏ++” தகுதிச் சான்று வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு, “ஏ பிளஸ் பிளஸ்”, “ஏ பிளஸ் ஏ” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர மதிப்பீட்டை வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழ கத்திற்கு கடந்த 2014ஆம் ஆண்டு “ஏ” மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தேசிய தர மதிப்பீட்டு குழு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு “ஏ பிளஸ் பிளஸ்” தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ஆராய்ச்சி, தேர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தர மதிப்பீடு வழங்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் இப்போது நாட்டின் உயர்தர நிறுவனமாக இருப்ப தால் பல்கலைக்கழக மானியக் குழு அதற்கு முழு சுயாட்சியை வழங்கி யுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் “ஏ++” தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டதை யடுத்து, ஆசிரியர்கள், ஊழியர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்தியாவில் 16ஆம் நூற்றா ண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய நக ரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகி யவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனடிப்படையிலேயே சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத் தக்கது.