சென்னை,டிச.25- தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் திங்களன்றும் (டிச.26) மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்படடுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்தது. காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தி லிருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலை வில் கிழக்கு, தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது. இலங்கையின் யாழ்ப் பாணத்திலிருந்து 160 கி.மீட்டரில் கிழக்கு-தென்கிழக்கேயும்,
சென்னையிலிருந்து 480 கி. மீட்டரில் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்றே வலுகுறைந்து மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடலோர பகுதியை அடையும். அதன்பிறகு திங்க ளன்று (டிச.26 ) காலையில் மேற்கு, தென் மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு சென்றடையும். இதனால் தமிழகத்துக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்க்ப்படுகிறது. கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதி யிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள் ளது. 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 மீட்டர் வேகத்தில் வீசும். இடை யில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். இவ்வாறு தெரிவித்திருக்கிறது.