states

ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை

கன்னியாகுமரி, ஜூன் 1- தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆவின் பால், ஒரு தலை சிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப் பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார். பால் உற்பத்தியைப் பெருக்கு வது, உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளதால் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன்  உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார். ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி கூடங்கள் மட்டு மின்றி தேவைப்படும் இடங்கள் அனைத்திலும் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தில்லியில் மல்யுத்த வீரர்கள் நடத்தி  வரும் போராட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு. குற்றம்சாட்டப் பட்ட பாஜக எம்.பியை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடி னார்கள். அவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

;