states

4 வருடமாக வழங்கப்படாத மகப்பேறு கால பணப் பலன்கள்: மனவேதனையில் அரசு மருத்துவர்கள்!

சென்னை,ஜன.23- அரசு மருத்துவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மகப்பேறு கால  பணப்பலன்களை உடனே வழங்க  வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக் கான சட்டப்போராட்டக் குழு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் அரசு பெண் மருத்து வர்களுக்கு உரிய நேரத்தில் (மாதம் தோறும்) வழங்க வேண்டிய மகப்பேறு விடுப்பு  பணப் பலன்களை 4 வருடத்தை கடந்த பின்னரும்கூட வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக,  2018ஆம் ஆண்டு முதல்  மகப்பேறு விடுப்புக்கான பணப் பலன்களை,  மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துள்ள 40 பெண் மருத்துவர்களுக்கு இன்னமும்  வழங்காமல் இருக்கிறது. பச்சிளங் குழந்தை களை பராமரிக்க வழங்க வேண்டிய அந்த ஊதியம் குழந்தைகளுக்கு நான்கு வயதாகியும் வழங்கப்படவில்லை.

அரசாணை எண்: 164/19 இன் படி  ஒரு தகுதிவாய்ந்த அதிகாரி நிரந்தர (திருமணமான) பெண் அரசு ஊழியர்க ளுக்கு முழு ஊதியத்தில் மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விதிமீறலை நீக்கி மகப்பேறு பலன்களை குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளருக்கும் மகப்பேறு சலுகைகளை வழங்க வேண்டும் என சமீபத்தில்  சென்னை  உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படாமல், 13 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உயர் படிப்பு படித்த பெண் மருத்துவர்களுக்கு, உரிய காலத்தில் ஊதியத்தை தர மறுத்து, மன உளைச்சலை ஏற்படுத்துவதை முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என நம்புகிறோம். அதைப்போல், சிறப்பு மற்றும் சூப்பர்  ஸ்பெஷாலிட்டி படிப்பு முடித்து அரசு  மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய பட்டப்படிப்பு ஊதிய  உயர்வு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள தும் மனவேதனையளிக்கிறது. 2020 முதல் சுமார் 3000 மருத்துவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ‘நான் கிளினிக்கல்’ படித்த முது நிலை ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுக ளுக்கு பிறகு வழங்க வேண்டிய  ஊதியத்து டன் கூடிய படி அனுமதிப்பதில் பெரும்  பாகுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, சீனியர்  மருத்துவர்களுக்கு மட்டும் வழங்குகிறார் கள். ஜூனியர் மருத்துவர்களுக்கு வழங்கவில்லை. இதனால், 2017 முதல்  சுமார் 100 இளம் மருத்துவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.  எனவே, இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டும். அனைத்து கிளினிக்கல்  முதுநிலை ஆசிரியர்களுக்கும் படி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.