states

எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் தேர்வில் சாதனை

பெற்ற இறுதித் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 25 பேர் தேர்வாகி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். மேலும், இம்மையத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நேர்முகத்  தேர்வு பயிற்சி வகுப்பிற்கு மையத்தின்  மாணவர்களை தவிர தேர்ச்சி பெற்ற  இதர மாணவர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். தற்போது நேர்முகத் தேர்வு முடிந்து   தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியரின் பட்டியலை  எல்ஐசி கோவை கோட்டமும், சேலம் கோட்டமும் வெளியிட்டது.

15 சதவீதம்

இதில், மொத்தம் தேர்ச்சி பெற்ற 157 மாணவர்களில் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பங்கேற்று பயிற்சி பெற்ற 23 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று பணி நியமனம் பெற உள்ளனர். இது ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 15 சதவீதம் பேர் ஆகும்.  இதுகுறித்து அம்பேத்கர் பயிற்சி  மையத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: வங்கி வளர்ச்சி அதிகாரிகள் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெற உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்.  அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்று சிறப்பாக சாதனையை புரிந்த  மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும்  பயிற்சியை நல்க உதவிய ஆசிரியர் பெருமக்களுக்கும், வழிகாட்டுதல் வழங்கிய எல்ஐசி யின்  அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள்  மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அம்பேத்கர் மையம் தனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.  கடந்த 14 ஆண்டுகளாக நடை பெற்று வரும்  இம்மையத்தில் தேர்ச்சி  பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷய மாகும். இப்பணிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவை கோட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் கோவை மாவட்ட வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கும், வழிகாட்டியாய் திகழும் கோவை மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் இவ் வெற்றியை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றோம் தொடரட்டும் சாதனைகள் என்று கூறினர்.