- 2022-ஆம் ஆண்டு மருத்துவத்துக் கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அழிந்து போன “ஹோமினின்களின் மர பணுக்கள் மற்றும் மனித பரிணாமம்” பற்றி கண்டுபிடித்ததற்காக ஸ்வாண்டே பாபோ நோபல் பரிசு பெறுகிறார்.
- “நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசாக கர்நாடக பாஜக உள்ளது. இதே அரசு தான் விவசாயிகள், தொழி லாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களிடம் இருந்து, 40% கமிஷன் வசூலிக்கிறது. ஒப்பந்த தாரர்கள், 40% கமிஷன் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என மாண்டியாவில் (கர்நாடகா) காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசினார்.
- நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை அளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், ஒடிஷா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் சிறுமிகள், ஆசிரியர் உட்பட 53 பேர் கொல்லப்பட்டனர்.
- நைஜீரியா நாட்டில் நீண்ட காலமாக “லம்பி” எனப்படும் கால்நடைகளுக்கு கட்டிகளை ஏற்படுத் தும் வைரஸ் பரவல் உள்ளது. தற்போதைய நிலை யில் அங்கிருந்து சிவிங்கி புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளின் இழப்புக் காக ஒன்றிய பாஜக அரசு வேண்டுமென்றே இதைச் செய்துள்ளது என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சாட்டியுள்ளார்.
- “ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது. நான் ஊடகங்களுக்கு ஆதர வானவன். ஆனாலும் ஊடகங்கள் என்னை விட்டு வைப்பதில்லை. ராஜஸ்தானில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் ஊடகங் கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களுக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்துடன் நடப்பவன் நான் அல்ல” என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியுள்ளார்.
- பக்கத்து வீட்டில் வசிக்கும் ‘உயர்சாதி’ பெண், தன்னு டைய வீட்டின் வழியாக எனது வீட்டிற்கு இணைய தள கேபிள் இணைப்பு செல்வதை விரும்பாத கார ணத்தால் ஏர்டெல் நிறுவனம் எனது இணைய இணைப்பை துண்டித்துவிட்டது என தலித் பெண் எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
- வருங்காலத்தில் மேற்கொள்ளப் போகும் விண்வெளி ஆய்வுகளுக்குத் தேவையானவர்களைத் தேர்வு செய்து வைத்துக் கொள்ள மக்கள் சீனம் திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக 14 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களில் விமானிகள், பொறியியல் வல்லுநர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். இதில் விமானிகளைப் பொறுத்தவரையில், சீன ராணுவத்தில் தற்போது விமானிகளாகப் பணியாற்றிக் கொண்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்து பிரிட்டன் அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. பிரதமராகப் பொறுப்பேற்றால் வரிச்சலுகை அளிப்பேன் என்று லிஸ் டிரஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் கடன் சுமை நிறைந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பத்து நாட்களிலேயே வரிச்சலுகைத் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள். பவுண்டு மதிப்பு சரிந்ததாலும், வரிச்சலுகைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
- ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியால் சவூதி அரேபியாவுக்கும், ஏமனுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டிருந்தது. ஏப்ரல் முதல் நடைமுறையில் இருந்த அந்தப் போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏமன் மண்ணில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்று ஏமன் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.