புதுக்கோட்டை, ஜூன் 22- புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் விசைப்படகு துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற் படையினர் வியாழக்கிழமை காலை கைது செய்தனர். இவர்கள் சென்ற 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் விசைப்படகு துறை முகத்தில் இருந்து 91 விசைப்படகு களில் மீனவர்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் தமிழரசன் (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரு டன் பாஸ்கர் (40), முத்துராஜா (25), அமரன் (30), ஜெகன்நாத் (35), குமார் (43) மற்றும், உதயகுமார் (60) என்பவ ருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் ரவீந்திரன் (40), உலக நாதன் (35), வைத்தியநாதன் (27) அருள்நாதன் (23), குமரேசன் (35) மற்றும் அகிலா என்பவருக்குச் சொந்த மான விசைப்படகில் அவரது கணவர் காளிமுத்து (45), அர்ஜுனன் (50) குமார் (42), குருமூர்த்தி (27), அருண் (22) ஆகிய 17 மீனவர்கள் நெடுந்தீவு அருகே வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படை யினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்த தாக கைது செய்தனர். இவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.