states

img

123 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த மாணவர் சங்கம்

கோட்டயம், ஜுன் 10- கோட்டயம் மாவட்ட அளவில் பழங்குடியினர் பள்ளி கள் உட்பட 123 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி எஸ்எப்ஐ தலைமையில் நடந்தது. ‘நாம் ஒன்றுபடுவோம் அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்’ என்ற முழக்கத்தின் கீழ் நிகழ்ச்சி நடை பெற்றது. புலிகுந்நில் பத்ரமடம் பழங்குடியினர் எல்.பி. பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.ரசல் துவக்கி வைத்தார். எஸ்எப்ஐ மாவட்டத் தலைவர் பி.ஆஷிக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மெல்பின் ஜோசப், மாநிலக் குழு உறுப்பினர் வைஷ்ணவி ஷாஜி, தலை மையாசிரியை சுஜா, பிடிஏ தலைவர் ராஜி ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.