states

img

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த போலி எஸ்பிஐ வங்கி!

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சோப்ரா என்ற கிராமத்தில் புதிதாக எஸ்பிஐ வங்கி கிளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரபலமான வங்கி என்பதால் கிராம மக்கள் வங்கி கணக்கை தொடங்கி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட வங்கி குறித்து, மற்றொரு கிராமத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த கிராமத்தில் எஸ்பிஐ வங்கி பெயரில் செயல்படுவது போலி எஸ்பிஐ வங்கி என தெரியவந்தது.

உடனே, இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று போலீசார் விசாரணை செய்தபோதுதான், 10 நாட்களாக போலியாக வங்கி செயல்பட்டு வந்தது. தெரியவந்துள்ளது.

மேலும், ரூ.2 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு வங்கியில் 4 பேருக்கு வேலை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொதுத்துறை வங்கியின் பெயரில் போலியாக ஒரு வங்கி செயல்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.