கோழிக்கோடு, மே 1- மற்ற மாநிலங்களை விட கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் என ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். அகில இந்திய மலையாளி சங்கத்தின் ஊடக விருதுகளை வழங்கிய அவர், கேரளாவில் பெண்களை மதிக்கும் மக்கள் இருக்கிறார்கள். இரவிலும்கூட பெண்கள் தனியாக பயணம் செய்கின்றனர். தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதே இதற்கு காரணம். இது மற்ற மாநிலங்களில் இல்லை” எனக் குறிப்பிட்டார்.