states

img

‘இவர்களுக்கு என்ன ஆறுதல் கூற முடியும்!’

கல்பேட்டா, ஆக.11- வயநாடு பேரிடர் பாதித்த பகுதியில் காணாமல் போன தந்தையை தேடிய மகனைப் பார்த்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கதறி அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

‘இதைப் பார்த்த பிறகு நான் என்ன சொல்வது, இது ஒரு மோசமான அனு பவம். இப்படி ஒரு காட்சியை நான் நேரில் பார்க்க வேண்டியிருக்கும் என்று என் வாழ்நாளில் நினைத்ததில்லை. அவர்களிடம் நான் என்ன கூற முடி யும்? அவர்களின் கேள்விக்கு பதில் இல்லை. அவர்களை காப்பாற்ற  முயற்சி செய்யலாம். அவ்வளவு தான்...’- என்று மனமுருகி அழுதார்.

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடிய பொதுமக்களு டன் அமைச்சர் ஏ.கே.சசீந்திரனும் ஆக.11 ஞாயிறன்று பங்கேற்றார். அப்போது, மண்சரிவில் சிக்கி காணா மல் போன தந்தையை தேடிய மக னை அமைச்சர் பார்த்தார். சிறுவன் நெருங்கியதும் அமைச்சர் உணர்ச்சி வயப்பட்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசும்போதும்   அமைச்சரின் குரல் தழுதழுத்தது.

‘இந்த காட்சியே நமக்கு இந்த அள வுக்கு துயரத்தை தருகிறது என்றால், அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களைக் காப்பாற்ற – பாதுகாக்க - உதவ அனைத்தையும் செய்ய வேண் டும். அவர்களது நம்பிக்கையை மீட்டெ டுக்க வேண்டும். அந்த வகையில் அரசு பொறுப்புடன் செயல்படும்’’ என்று அமைச்சர் கூறினார்.

உடல் உறுப்புகள் மீட்பு

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நடந்த வெகுஜன தேடு தல் வேட்டையில் மேலும் 2 உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. சூச்சிப்பாறைக்கும் கந்தன்பாறைக்கும் இடைப்பட்ட வளத்தூரில் இந்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஞாயிறன்று முண்டக்கை, சூரல்மலா உள்ளிட்ட ஆறு மண்ட லங்களில் இந்த வெகுஜன தேடுதல் வேட்டை நடந்தது. முகாமில் இருந்த வர்களில் தன்னார்வத் தொண்டு செய்தவர்கள், உள்ளூர் மக்கள்  பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர் களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள னர். தேடுதலில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காலை 9 மணிக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே தேடும் பகு திக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் கள். திங்களன்று ஆற்றின் தாழ்வான பகுதிகளில் மீட்புப் படையினரைப் பயன்படுத்தி தேடுதல் நடத்தப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இறப்பு எண்ணிக்கை 412

சனியன்று, பிரதமர் வந்து சென்ற பறகு நடந்த தேடுதலில் அருகில் உள்ள பகுதியில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டன. அதிகாரப்பூர்வ தகவலின்படி, வயநாடு பேரழிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 412 ஆகும்.