கேரளாவில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் மழைநீர் ஒழுகியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வடமாநிலங்களில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பல இடங்களில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி முன் பகுதி பெரிய அளவில் சேதமடைந்தது பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.
திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், கேரளாவில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் மழைநீர் ஒழுகியது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.