states

img

2017 பேரிடர் மீட்புக்கான கட்டணத்தை இப்போது கேட்கும் ஒன்றிய அரசு கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்

கொச்சி 2016 மற்றும் 2017 பேரிடர்க ளுக்கான ஏர் லிஃப்டிங் விமானக் கட்டணத்தை இப்போது ஏன் ஒன்றிய அரசு கேட்கி றது என்று நீதிமன்றம் கேட்டது.

வயநாடு பேரிடருக்குப் பிறகு ஒன்றிய அரசு இந்த கட்டணத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் கூறியது. வயநாடு பேரிடரில் உதவி தேவை இருக்கும் போது ஒன்றிய அரசு இந்த தொகையை கேட்கிறது. இத்தனை வருடங்கள் காத்திருந்த ஒன்றிய அரசு, அடுத்த 6 மாதம் வரை காத்திருந்து விட்டுத் தொகையைக் கேட்டால் போதாதா என்றும் நீதிமன்றம் கேட்டது.  

பேரழிவைச் சமாளிப்பதில் கவனம்  செலுத்தும்போது இந்தத் தொகை யைக் மற்றொரு வழியில் வசூலிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஒன்றிய உள்துறை அமைச்ச கத்திடம் விளக்கம் கேட்டது. மேலும் இது தொடர்பாக ஒன்றிய அரசு தெளி வான பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு கேட்டுக் கொண்டது.

பேரிடர் மேலாண்மை விதி களில் தேவையான தளர்வுகளை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் ரூ.181 கோடி மட்டுமே மீதம் உள்ள தாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய விதிகளின்படி வயநாடுக்கு மட்டும் இந்த நிதியை ஒதுக்க முடி யாது என மாநில அரசு தெளிவுபடுத்தி யுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.