states

வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் புனரமைப்பு பணி ; அமைச்சர் ஆய்வு

கேரள மாநிலம், கோட்ட யம் மாவட்டம், வைக்கத்தி லுள்ள தந்தை பெரியார் நினை வகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை செவ்வாய்க் கிழமை, தமிழ் வளர்ச்சி - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி- செய்தித்துறை செய லாளர் முனைவர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறி யாளர்கள் சதீஷ்குமார், மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின்  கேரள மாநில தொடர்பு அலுவலர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சாமிநாதன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், புனரமைப்பு பணிகளுடன், அதிக புத்த கங்களை கொண்டதாக நூலகம் விரிவுபடுத்தப்பட்டு அமைக்கப்பட வுள்ளது.

மேலும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக விடுபட்டு இருந்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  காலத்தால் அழியாத  ஒரு நினைவு சின்னமாக விளங்கும் வகையில் இதனை  அமைப்பதற்கான காரணம், கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகம் நுழையக்கூடாது என அந்த காலத்தில் அறிவித்திருந்த சமயத்தில், மகாத்மா காந்தி அவர்களின் உத்த ரவை ஏற்று தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்.  

ஏறத்தாழ 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்துவிட்டன. பெயிண்டிங், மின் இணைப்பு பணிகள் மழையின் காரணமாக தாமதம் ஆகியுள்ளன. விரைவில் இப்பணி கள் முடிக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட வுள்ளது என்று தெரிவித்தார்.