states

img

பணியிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் நீக்கம்; தலைவராக புதிய பொறுப்பு

பாலக்காடு, ஜுலை 6- தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா  சுரேஷ் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் நடத்தும் தொண்டு நிறுவன மான எச்ஆர்டிஎஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எச்ஆர்டிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: சொப்னா தனது சம்பளம் வாங்கும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், ஆனால் பெண்கள் அதிகாரமளித்தல் ஆலோசனைக் குழுவின் தலைவராகத் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதை அடுத்து, எச்ஆர்டிஎஸ் ஒரு புதிய நடவடிக்கையுடன் வருகிறது. அவர் சம்பளம் பெறும் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரது தற்போதைய நிலை சம்பளம் மற்றும் சலுகைகள் இல்லாமல் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சொப்னா பாலக்காட்டில் உள்ள எச்ஆர்டிஎஸ்ஸில் சிஎஸ்ஆர் இயக்குநராக கடந்த  பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். மாதம் ரூ.43000 சம்பளத்தில் இந்த நியமனம். சொப்னாவுக்கு எதிரான விசார ணை எச்ஆர்டிஎஸ்ஸை பாதித்ததால் அவர் நீக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சொப்னா  செவ்வாயன்று (ஜுலை 5) பாலக்காட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.