states

img

130 கல்லூரிகளில் 116 இல் மாணவர் சங்கம் வெற்றி

திருவனந்தபுரம், நவ.30- மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திற்கு (எம்.ஜி.பல்கலைக்கழகம்) உட்பட்ட கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றி பெற்றது. தேர்தல் நடந்த 130 கல்லூரிகளில் 116இல் அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது எஸ்எப்ஐ. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 38 கல்லூரிக ளில் 37, எர்ணாகுளத்தில் 48 கல்லூரிகளில் 40, இடுக்கியில் 26 கல்லூரிகளில் 22, பத்தனம்திட்டா வில் 17 கல்லூரிகளில் 16, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரே வளாகத்தையும் எஸ்எப்ஐ வென்றது. கேரளாவில் உயர்கல்வித்துறையை அழிக்கும் சங்பரிவாருக்கு எதிரான எஸ்.எப்.ஐ முன்வைக்கும் முழக்கங்களுக்கு மாணவர்கள் அளித்துள்ள அங்கீ காரமே இந்த வெற்றி. மாணவர்கள் மீதான துன்புறுத்தல், தவறான பிரச்சாரம், மாணவர் இயக்கத்தை அழிக்கும் முயற்சி களுக்கு எதிராக மாணவர் சமூகம் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தல் வெற்றியை ஈட்டியுள்ளது. மாணவர் சங்கத்தின் வரலாற்று வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த மாணவர்களுக்கும் தோழர்க ளுக்கும் எஸ்எப்ஐ மாநில தலைவர் கே.அனுஸ்ஸ்ரீ, செயலாளர் பி.எம்.அர்ஸோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சிவந்தது மகாராஜாஸ் கல்லூரி

எம்ஜி பல்கலைக்கழக கல்லூரிகளில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் எஸ்எப்ஐ மகத்தான வெற்றி பெற்றதோடு, எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி யில், எஸ்எப்ஐ தலைவர்கள் வரலாற்று பெரும் பான்மையுடன் அனைத்து இடங்களையும் வென்ற னர். டி.எஸ்.ஸ்ரீகாந்த் தலைவராக வெற்றிபெற்றார். எம்.அதிரா (துணைத் தலைவர்), எஸ்.எஸ்.ரூபி (பொ துச் செயலாளர்), கே.நவநீத், கே.கே.அமல் (யு.யு.சி.எஸ்), பி.பிரகிருதி, வி.விபஞ்சிகா (மகளிர் பிரதிநிதிகள்), கே.எஸ்.ஸ்ரீஹரி (ஆர்ட்ஸ் கிளப் செயலாளர்), தமீம் ரஹ்மான் (இதழ் ஆசிரியர்) தேர்வு செய்யப்பட்டனர். இதுபோல் சங்கனாச்சேரி எஸ்பி கல்லூரியிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. கல்லூரியின் முதல் பெண் தலைவராக அம்ரிதா சி.எச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.