states

img

கேரளாவில் கால்பந்து போட்டியின்போது சரிந்து விழுந்த பார்வையாளர் கேலரி

கேரளாவில் கால்பந்து போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பார்வையாளர் கேலரி சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவ் பகுதியில் பூங்கோடு எல்பி பள்ளி  மைதானத்தில் அகில இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டி  டோர்னமெண்டின்  இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. போட்டியை பார்த்து ரசிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து செல்கிறார்கள். ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை பார்ப்பதற்கு மைதானம் சுற்றிலும் மூங்கில் மற்றும் மரப்பலகைகள் கொண்டு இருக்கைகள் அமைத்துள்ளனர்.

அப்போது இரவு 9 மணி அளவில் திடீரென தற்காலிக பார்வையாளர் கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலப்புரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு காளிகாவ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அதனைதொடர்ந்து போட்டியை நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.