states

img

கேரளாவையும் பீகாரையும் அவமதித்த மோடிக்கு பினராயி விஜயன் பதிலடி

திருவனந்தபுரம், ஏப்.21- விளம்பரங்கள் மற்றும் பேட்டிகள் மூலமாக பிரதமர் மோடி கேரளத்தை இழிவுபடுத்துவது தொடர்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி  கேரளத்துக்கு எதிராக பேசுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பீகார் போன்று கேரளத்திலும் ஊழல் நடந்துள்ளதாக பிரதமர் சனி யன்று குற்றம் சாட்டினார். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை அவர் அவமதிக்கிறார். இந்தியாவில் ஊழல் குறைந்த மாநிலம் கேரளம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள் கிறார்கள். ஊடக ஆய்வுகள் மையம் (சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்), டிரான் ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் லோக்கல் சர்க்கிள்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய ‘இந்திய ஊழல் கணக்கெடுப்பு’ மூலம் இந்த அங்கீ காரம் கேரளத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், அதையும் மீறி எந்த உண்மை யான அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் கேரளத்தை அவமதிக்கிறார்?

பத்தாண்டுகள்  மோடியின் ஊடக அச்சம்
“குடும்ப ஆட்சி மற்றும் ஊழலில் பீகார் அரசியல்வாதிகளைக் கூட  கேரளாவின் இடதுசாரி அரசு தோற் கடித்து வருகிறது” என்று தனது திட்ட மிடப்பட்ட பேட்டியில் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். பத்தாண்டு களாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தத் தயாராக இல்லாத நரேந்திர மோடியின் முன் அமர்ந்திருந்தவர்கள், மலையாளத்தின் ‘ஏசியாநெட் நியூஸ்’ கன்னடத்தின் ‘ஏசியாநெட் ஸ்வர்ணா நியூஸ்’, கன்னட பிரபா செய்தி தொலைக் காட்சி ஊடகவியலாளர்கள். பேட்டி  என்கிற பெயரில் முன் வரையறுக்கப் பட்ட கேள்விகள் மற்றும் தயாரிக்கப் பட்ட பதில்களுடன் நடந்த போட்டோ ஷூட் அது.

கேரளத்துக்கு எதிரான இந்த பிரச்சாரத்தைத் தகர்க்கும் வகையில் ஏப்ரல் 21 ஞாயிறன்று நடந்த  பத்திரிகை யாளர் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.

முதலமைச்சர் வழங்கிய புள்ளிவிவரங்கள்
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறி யீடு, பள்ளிக் கல்வித் தரக் குறியீடு, நிலை யான வளர்ச்சிக் குறியீடு மற்றும் பொது விவகாரக் குறியீடு ஆகியவற்றில் கேர ளம் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை நமது மாநிலம் தொடர்ந்து பெற்று வருகிறது. கல்வியறிவில் கேரளம் 96 சதவிகிதம், ஆயுட்காலம் (75.2 ஆண்டுகள்), உயர் சுகாதார குறியீடுகள், நவீனமயமாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு, நல்ல சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு மற்றும் பொருத்த  மான சுற்றுலா உள்கட்டமைப்பு போன்ற சமூக உள்கட்டமைப்புகளுடன், கேர ளம் முழு நாட்டிற்கும் முன்மாதிரியாக உள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கைக்கு எதிராக அதன் தலைவ ராக இருக்கும் மோடிதான் கேரளம் மோசம் என்கிறார்.

குடும்பஸ்ரீ திட்டம், சுகாதாரத் துறை யில் சீர்திருத்தங்கள், புகழ்பெற்ற மாண வர் போலீஸ் படைத் திட்டம் மற்றும் நவ கேரளா மிஷன் போன்ற கேரளத்தின் முன் னோடியான முயற்சிகள் தேசிய மற்றும் உலகளவில் பின்பற்றப்பட்டுள்ளன.

ஊடகங்களில் பிரதமரின்  கயிறு திரிப்பு
மாநிலங்களுக்கான வரி ஒதுக்கீடு களை குறைக்க வலியுறுத்தியவர் பிரதமர். அரசியல் சட்டவிதிகளைக் கூட மோடி பின்பற்றவில்லை. வரி பங்களிப்பு யாருடைய கொடையும் அல்ல. பாஜகவின் விளம்பரங்கள் கேர ளாவைப் பற்றி தவறான புரிதலை பரப்புகின்றன. நிதி கமிஷன்கள் மூலம் ஒதுக்கீடுகளை பகிர்ந்தளிப்பது யாருடைய தயவிலும் அல்ல. இது அரசமைப்பு ரீதியாக மாநிலங்களுக்கு சொந்தமானது. நிதி கமிஷனின் அளவு கோல்களில் தலையிட்டு கேரளாவுக்கு உரிய தொகையை மறுப்பதுதான் ஒன்றிய அரசின் அணுகுமுறை.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்த  பிறகு, வரிப் பங்கீட்டில் மாநிலங் களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. எனவே, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வரன் முறைப்படுத்த நிதி ஆணையத்திடம் கோரப்பட்டது. இது மக்கள் தொகை யை கட்டுப்படுத்திய கேரளத்தின் சாதனைகளுக்கு பெரும் பின்னடை வாக அமைந்துவிட்டது. இந்த பிரச்ச னையை அரசு எழுப்பும் போது, அதற்கு தீர்வு காணாமல் தொகையை கூறுகிறது. பாஜகவின் விளம்பரங் களும் கேரளாவைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றன. கேர ளாவின் கழுத்தை நெரிப்பவர்களே அம்மாநிலத்தின் மீது குற்றச்சாட்டு களை சுமத்தி வருகின்றனர்.

அந்த பேட்டியில் நரேந்திர மோடி கூறியவற்றின் உண்மையை தெரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம். 13ஆவது நிதிக் கமிஷன் காலம் முதல் 14ஆவது நிதிக் கமிஷன் காலம் வரை மொத்த மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான மத்திய வரிப் பங்கு 42 சதவிகிதமாக அதிகரித்ததை பாஜக அரசின் சாத னையாக முன்வைக்கிறார். ஆனால், நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியத்தின் அம்பலப்படுத்தல் குறித்து “ரிப் போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” வெளியிட் டுள்ள புதிய செய்தி, மோடியின் கூற்றை மறுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றவுடன் மாநிலங்களுக் கான வரி ஒதுக்கீடுகளை குறைக்கு மாறு நிதி ஆயோக் மீது நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக நிதி ஆயோக் சிஇஓ தெரிவித்துள்ளார். அவர் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த போது, பிரதமருக்கும், நிதி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டிக்கும் இடையே பி.வி.ஆர்.சுப்ரமணியம் இடைத்தரகராக செயல்பட்டது தெரிய வந்தது. 42 சதவிகித மத்திய வரிப் பங்கை மாநிலங்களுக்கு வழங்க ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதிக்குழு பரிந்துரை செய்தது. அதை 33 சதவிகிதமாகக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முயன்றார்.

நிதி ஆணையங்கள் மாநிலங் களுக்கான வரி ஒதுக்கீடுகளில் சுதந்திரமான முடிவுகளை எடுக்க அரசமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளாகும். இந்த அரச மைப்பு நெறிமுறையை மீறி பிரதமர் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுத்தார். ஆனால் ஒய்.வி.ரெட்டி மற்றும் நிதி ஆயோக்கின் வலுவான நிலைப்பாட்டின் காரணமாக, பாஜக  அரசால் தனது சூழ்ச்சியை செயல் படுத்த முடியவில்லை.

மக்களவைத் தேர்தலில் கேர ளத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட பதற்றமும், விரக்தியும் தான், பா.ஜ.க.வையும், பிரதமரையும் தவறான விஷயங்களைச் சொல்லத் தூண்டுகின்றன.

எல்டிஎப் மீது  மும்முனைத் தாக்குதல்
கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு நேரடி யான மும்முனை தாக்குதல்களில் இருந்து தப்பித்து, மாநிலத்தில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. முதலில் மத்திய அரசும் அதைக் கட்டுப்படுத்தும் சங்பரிவார மும். அடுத்ததாக அவர்களுடன் தோளோடு தோள் நின்று இடதுசாரி களைத் தாக்கும் யுடிஎப். மூன்றா வது, வலதுசாரி ஊடகங்கள். பொய்ப் பிரச்சாரம், இடதுசாரி எதிர்ப்பு,  நவீன உத்திகள் என்று தங்களை  இந்த ஊட கங்கள் மாற்றிக்கொண் டன. இந்த முத்தரப்பு கூட்டணியால் ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் நேரடியாக முறியடிக்க எல்.டி.எப்-க்கு கேரளத்தின் முழு ஆதரவு உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் வரும் 26-ஆம் தேதி தேர்தல் அமையும் என்று முதல்வர் கூறினார்.