கேரளம் மாநிலம் திருச்சூர், பாலக் காடு ஆகிய மாவட்டங்களில் சனியன்று காலை 8.15 மணிய ளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்கு வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் திருச்சூர் மாவட்டம் குருவாயூர், குன்னம் குளம், கண்டனச்சேரி, வேலூர், முண்டூர், எருமப்பட்டி, கரியன்னூர், வெள்ளரக் காடு, நெல்லிக்குன்றம், வெள்ளத்தேரி, மரத்தங்கோடு, கடங்கோடு பகுதிகளிலும், தேசமங்கலம் பகுதிகள் அதிர்ந்தன. மேலும் பாலக்காடு மாவட்டம் திருமிட்டகோட்டில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.