states

img

மீடியா ஒன் டிவி சேனலுக்கு மீண்டும் தடை

கேரளாவை சேர்ந்த முன்னணி மலையாள செய்தி சேனல்களில் ஒன்றான  மீடியா ஒன்னின் ஒளிபரப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு முடக்கிய நடவடிக்கைக்கு கேரளா உயர்நீதிமன்றம் 2 நாட்கள் தடை விதித்துள்ளது.

மலையாள செய்தி சேனல்களில் ஒன்றான மீடியா ஒன்னின் ஒளிபரப்பை இன்று பிற்பகல் ஒன்றிய அரசு முடக்கி உள்ளது. இது தொடர்பாக மீடியா ஒன்னின் செய்தி ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி டிவி சேனல் ஒளிபரப்பை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. எங்கள் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. ஆகையால் எங்களது ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இந்த தடைக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த தடை தற்காலிகமானதாகவே இருக்கும். நிச்சயம் நீதியை நிலைநாட்டி மீண்டும் மக்களுக்கு ஒளிபரப்பு சேவையை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு பிரமோத் ராமன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மீடியா ஒன் டிவி சேனலுக்கு வழங்கப்பட்ட ஒளிபரப்பு உரிமம் காலாவதியாகவில்லை. இந்த சேனலில் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டிருந்த நிலையில் ஒன்றிய அரசு திடீரென தடை விதித்திருக்கிறது என்கின்றன என தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இதனிடையே இந்த தடைக்கு எதிராக மீடியா ஒன் டிவி சேனல் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், தங்களது டிவி சேனல் எந்த ஒரு தேசவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தெரிவித்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகரேஷ், மீடியா ஒன் டிவி சேனல் ஒளிபரப்பை நிறுத்த கூடாது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு 2 நாட்கள் தடை விதிப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 2020 ல் வடகிழக்கு தில்லி வன்முறை குறித்த செய்திகள் வெளியாகி இருந்த போது மீடியா ஒன் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.