சபரிமலை, ஜன.14- சபரிமலையில் குவிந்த லட்சக்க ணக்கான பக்தர்கள் மகரவிளக்கை யும் திருவாபரணம் அணிந்த ஐயப்ப னையும் தரிசித்துவிட்டு மலை இறங்கத் தொடங்கினர். முன்னதாக சபரிமலை சன்னி தானத்தில் உள்ள ஐயப்பன் திரு வுருவச் சிலைக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் பந்தளம் அரண் மனையிலிருந்து கொண்டு வரப்பட் டது. மாலை 5.30 மணிக்கு சரம் குத்தியில் திருவாபரண ஊர்வ லத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. தேவஸ்வம் அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன், வாரியத் தலைவர் கே. அனந்தகோபன், எஸ்.எஸ்.ஜீவன் மற்றும் பலர் அதனை சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். இரவு 8.45 மணிக்கு தீபாராதனை மற்றும் மகர விளக்குக்கு பின் மகரசங்கர பூஜை நடந்தது. நெய் அபிஷேகமும், திரு வாபரணங்கள் அணிந்து விக்ரக தரி சனமும் நடைபெற்றது. போக்குவரத்தை கட்டுப்படுத்த ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் மேற்பார்வையில் சிறப்பு அதிகாரி இ.எஸ்.பிஜுமோன், 3 எஸ்.பி, 21 டி.வை.எஸ்.பி, 36 ஆய்வாளர்கள், 180 உதவி ஆய்வாளர்கள் உட்பட இரண்டாயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.