states

img

பொய்யால் முதல்வரை களங்கப்படுத்த முடியாது: ஏ.விஜயராகவன்

திருவனந்தபுரம், ஜுன் 9- முதல்வர் பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கையும், அர சியல் வாழ்க்கையும் முற்றிலும் வெளிப்படையானது என்றும், பொய்களால் அவரை களங்கப் படுத்த முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜய ராகவன் தெரிவித்துள்ளார்.  அவரது ஆளுமையை வைத்து எந்தத் தவறும் இல்லை. பினராயி விஜயன் முதலமைச்சராக வரும் போதே  யுடிஎப் பல்வேறு எதிர்ப்பு களை தெரிவித்தது. அதில் ஊட கங்களும் ஈடுபட்டதாக விஜய ராகவன் தனூரில் செய்தியாளர்களி டம் தெரிவித்தார். தவறான எதையும் பினராயி விஜ யனின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்துப் பார்க்க முடியாது.  அவர் முதல்வராக பொறுப்பேற் பதற்கு பெரும் எதிர்ப்பை யுடிஎப் தெரிவித்தது. அதற்கு ஊடகங்கள் துணை நின்றன. எதிர்ப்பு தெரி விக்கும் கதாபாத்திரங்கள் எதுவும் நற்குணத்தின் குறியீடுகள் அல்ல. ஊடகங்கள் அவர்களை மதிப்புக்கு உரியவர்களாக சித்தரிக்கின்றன. முத லமைச்சரையும், அரசையும் தகர்க்க முயல்கின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லா காலத்திலும் உண்டு. அதையெல்லாம் சந்தித்துத் தான் இந்த அளவுக்கு வந்துள்ளோம் என்றார் விஜயராகவன்.