states

கேரளத்தில் 23 உள்ளாட்சி வார்டு தேர்தல்: கூடுதல் இடங்களை பெற்று எல்டிஎப் வெற்றி

திருவனந்தபுரம், பிப். 23 - கேரளம் மாநிலத்தில் 23  உள்ளாட்சி வார்டுகளுக்கு நடை பெற்ற இடைத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கி ரஸ், பாஜக வசமிருந்த வார்டுகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. 23 உள்ளாட்சி வார்டுகளில், கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஐந்து இடங்களில் மட்டுமே எல்டி எப் வெற்றி பெற்றிருந்தது.

தற்போது  10 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. 13 இடங்களை ஏற்கெனவே பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களை இழந்தது. அதன் பலம் 10-ஆகக் குறைந்துள்ளது. நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக ஒரு இடத்தை இழந்து மூன்று இடங்களையே தக்க வைத்துள்ளது. நெடும்பாசேரி பஞ்சாயத்து (எர்ணாகுளம்) கல்பாகா நகர், முல்லச் சேரி பஞ்சாயத்து (திருச்சூர்) பாதி யார்குளங்கரா மற்றும் முசு பிலாங்காடு பஞ்சாயத்து (கண் ணூர்) மம்மக்குன்னு ஆகிய இடங்களை காங்கிரஸ் கூட்டணியிட மிருந்து எல்டிஎப் கைப்பற்றியுள்ளது.

எருத்தன்பதி பஞ்சாயத்திற்குட்பட்ட (பாலக்காடு), பிடாரிமேடு வார்டில் எல்டிஎப் ஆதரவு சுயேச்சை மார்ட்டின் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார். வெளியநாடு பஞ்சாயத்து (ஆலப்பாக்கம்) உள்ள கிடாங்கரா பஜார் தெற்கில் போட்டியிட்ட எல்டிஎப் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி யடைந்தார்.

திருவனந்தபுரம் மாநகராட்சி வெள்ளார் வார்டில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பாணத்துரா பி.பைஜு 151 வாக்குகள் வித்தி யாசத்தில் பாஜகவை தோற்கடித் தார். இங்கு ஏற்கெனவே பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. மொத்தமுள்ள 23 வார்டுகளில் சிபிஎம் - 7, சிபிஐ - 2, ஆதரவு சுயேட்சை - 1 என எல்டிப் 9 இடங்களி லும், எல்டிஎப் ஆதரவு சுயேட்சை ஒரு இடத்திலும், காங்கிரஸ் - 4,  ஐயுஎம்எல் - 6 என யுடிஎப் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக மூன்று இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன.