கேரளாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 எல்.டி.எப் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 30) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
பத்தனம்திட்டயில் டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் கேரள சட்டமன்ற துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், சாலக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மலப்புரம் தொகுதி வேட்பாளர் வி.வாசிப் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.