மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்தின் முக்கிய நிகழ்வான திருவோணம் ஞாயிறுன்று கொண்டப்பட்டது. இந்த திருவோண பண்டிகையை கேரள மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், கோவிலில் வழிபாடு நடத்தியும், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கொண்டாடினர். இதனால் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் விழாக்கோலம் பூண்டது. கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் மலையாளம் பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.